கடைசியாக ரகோத்தமன் சொன்ன பதிலில் சிறிது நிஜம் இருந்தது, யாரிடம், எப்போது சோதனை நடத்த வேண்டும்? என்பதை தீர்மானிப்பது மத்திய அரசின் கையில் இருக்கிறது. நிச்சயம் ஒரு மாநில அரசின் தலைமை பொறுப்பில் இருக்கும் உயர் மட்ட அதிகாரியின் வீட்டிலும், அலுவலகத்திலும், தலைமைச் செயலகத்திலும் திடீரென சோதனை நடத்தப் பட்டதில் மத்திய அரசின் நோக்கம் என்னவாக இருக்கும் என இப்போது அனுமானிக்க முடியாவிட்டாலும் நிச்சயம் அவர்களது அனுமதியின் பேரிலும், உத்திரவின் பேரிலும் தான் இது நிகழ்ந்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. இதை நாடு முழுதும் நிகழ்த்தப் படும் ஊழலுக்கெதிரான நிகழ்வு மட்டுமே என்று மட்டும் ஒதுக்கி விட முடியாது. என்றார்.