திமுக கூட்டணியிலிருந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி விலகப் போகிறதா?
கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட குறைவான இடங்கள் கிடைத்தால் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மார்க்சிய கம்யூனிஸ்ட் எடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட 25 தொகுதிகளைவிட 3 தொகுதிகளைக் கூடுதலாக காங்கிரஸ் பெற்றிருக்கிறது.
புதிதாகக் கூட்டணியில் வந்து இணைந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி அளிக்கப்பட்ட நிலையில், பேரவைத் தேர்தலில் போட்டியிடவும் கூடுதலான தொகுதிகளை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடன் இன்னமும் தொகுதிப் பங்கீடு எட்டப்படவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் இதே கூட்டணியில் கடந்த முறை தலா 6 இடங்களில் போட்டியிட்டு, தலா இரு இடங்களில் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுமே தலா ஓரிடத்தைக் குறைத்துக் கொண்டு 5 தொகுதிகளில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டு, தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டில் இன்று(மார்ச் 18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட்டது.
ஆனால், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்தபோதிலும் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், 6 தொகுதிகளுக்கும் குறைவு என்றால் திமுக கூட்டணியிலிருந்து விலகிப் போட்டியிடுவதென மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி நாளை, வியாழக்கிழமை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இன்றிரவு தொடர்ந்து பேசப்பட்டால் சமாதானம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
Summary
Informed sources say that the Marxist Communist Party has decided to withdraw from the alliance if it gets fewer seats than the number of seats it contested in the last assembly election.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?

அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது மார்க்சிஸ்ட், விசிக..?

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

தொகுதிப் பங்கீடு: திமுக - மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டாம் சுற்று பேச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


