தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதா?

புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்ற தணிக்கையில் கவலைதரும் விஷயமே வெளியாகியிருக்கிறது.

News image
Updated On :16 செப்டம்பர் 2023, 12:10 pm

புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்ற தணிக்கையில் கவலைதரும் விஷயமே வெளியாகியிருக்கிறது.

பேருந்து நிலையத்தின் வடிவமைப்பில் பல்வேறு கோளாறுகள் இருப்பதாக தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஒரு தரைப்பகுதி என்றால் அதில் தொடர்ச்சியற்று, ஆங்காங்கே மேடு பள்ளங்கள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தொட்டுணரும் வழிகள் இன்மை, மிக நீண்ட மற்றும் இடையில் நிறுத்தமில்லா சாய்தளங்கள் அதிகம் இருப்பது சக்கர நாற்காலிகளில் வருவோருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

393.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், விரைவில் தென் மாநிலங்களை நோக்கிச் செல்லும் பேருந்து நிலையமாக மாறவிருக்கும் நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருக்கிறதா என்ற தணிக்கை நேற்று நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினரால் இந்த தணிக்கை நடத்தப்பட்டுள்ளது. இதனை சிஎம்டிஏ அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தனர்.

இதில், பல குறைபாடுகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1:12 என்ற விகிதத்தில்தான், சாய்வுதளம் அமைக்கப்பட வேண்டும். அதாவது, தொடர்ச்சியாக 9 மீட்டருக்குத்தான் சாய்தளம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு எந்த இடத்திலும் நிறுத்தம் இல்லாமல் தொடர்ச்சியாக 25 மீட்டருக்கு சாய்தளம் அமைக்கப்பட்டிருப்பது. இது சக்கர நாற்காலிகளை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

இதேபோல், தொட்டுணரக்கூடிய பாதை பார்வைக் குறைபாடுள்ள பயணிகளுக்கு பேருந்து நிறுத்துமிடத்துக்கு மட்டும் மட்டுமே வழிகாட்ட உதவுகிறது. பேருந்து நுழைவாயில்கள் குறுகியதாக நிறுத்தப்படுகிறது. 

மாற்றுத்திறனாளிகள், கடைகளுக்கோ அல்லது உணவகங்களுக்கோ அணுகலைப் பெறுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதமே அறிவுறுத்தியிருந்தது.

எனவே, இந்த பேருந்து நிலையத்தை, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றதாக மாற்ற அரசு மேலும் செலவு செய்ய வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.