தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பி.இ. படிப்புக்கு இருக்கும் மவுசு எம்.இ.க்கு இல்லையே ஏன்?

பொறியியல் படிப்புக்கு எப்போதுமே ஒரு தனிமவுசு உண்டு. ஆனால், பி.இ. எனப்படும் இளநிலை பொறியியல் படிப்புக்கு இருக்கும் மவுசு, ஏனோ தெரியவில்லை எம்.இ. எனப்படும் முதுநிலை பொறியியல் படிப்புக்குக் கிடைக்கவில்லை

News image
பி.இ. படிப்புக்கு இருக்கும் மவுசு எம்.இ.க்கு இல்லையே ஏன்?
Updated On :1 பிப்ரவரி 2024, 9:39 am

DIN


பொறியியல் படிப்புக்கு எப்போதுமே ஒரு தனிமவுசு உண்டு. ஆனால், பி.இ. எனப்படும் இளநிலை பொறியியல் படிப்புக்கு இருக்கும் மவுசு, ஏனோ தெரியவில்லை எம்.இ. எனப்படும் முதுநிலை பொறியியல் படிப்புக்குக் கிடைக்கவில்லை.

அதனால்தான், தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் முதுநிலை பொறியியல் படிப்புகள் சிலவற்றை மூடுவதற்கு பொறியியல் கல்லூரிகள் அனுமதி கேட்டுள்ளன.

2022-23ஆம் கல்வியாண்டில், குறைந்தபட்சம் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 16 பொறியியல் கல்லூரிகள், எம்.பி. முதுநிலை பட்டப்படிப்பில் பல்வேறு பிரிவுகளை மூடுவதற்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளன.

அதற்குக் காரணம் கடந்த கல்வியாண்டில் மட்டும் எம்.இ. மற்றும் எம்.டெக். படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளிலும் 85 சதவீத மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாகவே இருந்தன.

எம்.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்ஸ், பவர் சிஸ்டம் எஞ்ஜினியரிங், அப்லைடு எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை மூட அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவை முற்றிலும் வழக்கொழிந்துபோய்விட்டதாக அரசு பொறியியல் கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் கே. செந்தில் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பாடப்பிரிவுகளிலிருக்கும் 204 மாணவர் சேர்க்கை இடங்கள் ரத்தாகவிருக்கின்றன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பொறியியல் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்புக்கு அதிகம் பேர் விண்ணப்பிப்பார்கள். அந்த படிப்பை முடித்து வெளியே வரும் பொறியாளர்களுக்கு உடனடியாக நல்ல வேலை கிடைத்து விடுகிறது. எனவே, அவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுநிலை பொறியியல் படிக்காமல் தவறவிடுவிடுகிறார்கள் என்கிறார் ஒரு பொறியியல் கல்லூரியின் தலைமை பேராசிரியர் சஷிதரன்.

இந்தக் கல்வியாண்டில் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் முதுநிலை பொறியியல் மாணவர்  சேர்க்கை இடங்கள் உள்ளன. ஆனால், வெறும் 3,073 மாணவர்கள் மட்டுமே முதுநிலை பொறியியலுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் 1,659 பேருக்கு மட்டுமே சேர்க்கை கிடைத்துள்ளது. இதைக்காட்டிலும் கடந்த கல்வியாண்டில் 2,106 பேர் முதுநிலை பொறியியலில் சேர்ந்துள்ளனர்.

அதேவேளையில், முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்புக்கு அதிக வரவேற்பு இருப்பதால், புதிதாக நான்கு கல்லூரிகள் அந்தப் பாடப்பிரிவைத் தொடங்க அனுமதி கேட்டுள்ளன. இதன் மூலம் வரும் கல்வியாண்டில் எம்சிஏ மாணவர் சேர்க்கை இடங்கள் 330 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.