2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சாம்பல் புதன்: கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.

News image
தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் திருப்பலியில் பங்கேற்ற இறைமக்களுக்கு சாம்பலால் சிலுவை அடையாளத்தை நெற்றியில் பூசுகிறார் ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா.
Updated On :14 பிப்ரவரி 2024, 4:09 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலம் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி வரை 40 நாள்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பது, உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செய்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவர்.

இந்த சாம்பல் புதனை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் புதன்கிழமை அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஆலய பங்குத்தந்தை குமார்ராஜா தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து அவர், திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு சாம்பலை கொண்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசினார். இதில், ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.

இதேபோன்று, தூத்துக்குடியில் உள்ள திரு இருதய ஆலயத்தில், மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையிலும், தூத்துக்குடி லூதம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ தலைமையிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.

மேலும், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சபைகளிலும் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.