டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தமிழகத்தில் கரோனா சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு: மத்திய அரசு

தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 மே 2021, 11:02 am

தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரவி வரும் கரோனா இரண்டாம் அலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதார இணை செயலாளர் பேசியது,

கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிக்கின்றது.

தற்போது 11 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கர்நாடகத்தில் 5,98,625 பேர், மகாராஷ்டிரத்தில் 5,21,683 பேர், கேரளத்தில் 4,42,550 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

8 மாநிலங்களில் 50,000க்கும் அதிகமானோரும், 17 மாநிலங்களில் 50,000க்கு குறைவாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரம், குஜராத், உ.பி., சட்டீஸ்கர் மாநிலங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

நாட்டில் கடந்த வாரம் 21.9% ஆக இருந்த நேர்மறை விகிதம் இப்போது 19.8% ஆக குறைந்துள்ளது. தில்லி, சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நேர்மறை விகிதம் குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.