அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தில்லியில் தடுப்பூசி போடும் நேரம் நீட்டிப்பு: முதல்வர்

தில்லியில் கரோனா தடுப்பூசி போடும் நேரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)

Updated On :18 மார்ச் 2021, 11:39 am

தில்லியில் கரோனா தடுப்பூசி போடும் நேரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள சூழலில், தில்லியிலும் நாள்தோறும் 500க்கும் அதிகமானோருக்கு கரோனா கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தில்லி முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,

கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 30,000 முதல் 40,000 பேருக்கு நாள்தோறும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்னும் சில நாள்களில் அதை 1.5 லட்சமாக உயர்த்தவுள்ளோம். 

தற்போது 500 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அதை 1000 மையங்களாக உயர்த்தவுள்ளோம். அனைத்து அரசு மையங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் நேரம் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவதை அனைவரும் உறுதி செய்யவேண்டும்.

கரோனா தடுப்பூசி தயாரிப்பு அதிகரித்துள்ளதால், அதிக அளவிலான தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.