பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 52% பேருக்கு தடுப்பூசி

அமெரிக்காவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 52 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2021, 10:20 am

அமெரிக்காவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 52 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்,

நாடு முழுவதும் இதுவரை 30.1 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட 63.5 சதவீதம் பேர் குறைந்தது முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளனர்.

65 வயதுக்கு மேற்பட்ட 86.3 சதவீதம் பேர் முதல் தவணையும், 75.5 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 52 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், சுதந்திர தினமான ஜூலை 4க்கு முன்பு 45 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் கடந்தாண்டு டிசம்பர் 14ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.