/

அசாமில் படகு விபத்து: 4 பேர் பலி

அசாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாக துணை ஆணையர் புதன்கிழமை தெரிவித்தார்.

News image

அசாமில் படகு விபத்து: 4 பேர் பலி

Updated On :27 ஜனவரி 2021, 11:43 am

அசாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாக துணை ஆணையர் புதன்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் செவ்வாய்க்கிழமை 14 பேர் பயணித்த சுற்றுலாப் படகு கவிழ்ந்துள்ளது. 

இதுகுறித்து ஜோர்ஹாட் துணை ஆணையர் ரோஷ்னி அபரஞ்சி கோராட்டி கூறுகையில்,

செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்த பயணிகள் 14 பேர் ஒரு சிறிய நாட்டு படகில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது, இந்த விபத்து அதிக சுமை காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.

இந்த விபத்தில் மீட்கப்பட்ட 10 பயணிகள் ஜோர்ஹாட் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காணாமல் போன 4 பேரின் சடலங்கள் பாக்மோரா சுற்றுலா இடத்திற்கு அருகே மாநில பேரிடர் மீட்புப்ப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் பபன் ராய் (30), ராஜியா டிகுலா (24), சாஹில் சவுகான் (15), மற்றும் சுஃபியன் செளகான் (9) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

15 நாள்களுக்குள் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.