குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

வங்கதேசத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 4 பேர் பலி

வங்கதேசத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.

News image
வங்கதேசத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 4 பேர் பலி
Updated On :27 ஜனவரி 2024, 7:16 pm

IANS

வங்கதேசத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.

தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான காசிப்பூசில் ஒரு சமூக சமையலறையில் திங்கள்கிழமை அதிகாலை இந்த வெடிவிபத்து நடந்துள்ளது. இதில் 4 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துற்சி அதிகாரி கபிருல் ஆலம் கூறியதாவது,

"ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சமையலறைக்குள் உணவு சமைப்பதற்காக அதிகாலை 5 மணியளவில் ஒரு பெண் சென்றுள்ளார். அப்போது சமையல் எரிவாயு உருளை வெடித்ததில், அந்த பெண், அவரது கணவர் உள்பட 4 பேர் பலியாகினர்.

அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவியதால் 20 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.