பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

சச்சின் டிவீட் குறித்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவு

கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்ட டிவிட்டர் செய்தி குறித்து விசாரிக்க மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

News image
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
Updated On :27 ஜனவரி 2024, 7:29 pm

IANS

கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்ட டிவிட்டர் செய்தி குறித்து விசாரிக்க மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில், சர்வதேச பாப் நட்சத்திரம் ரிஹானா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் ஆதரவு தெரிவித்து டிவீட் வெளியிட்டனர்.

அவர்களின் டிவிட்டர் செய்தி வெளியானவுடன் கிரிக்கெட் வீரர் சச்சின், உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டினர் பங்குபெற தேவையில்லை என டிவீட் செய்தார். அதன்பின் வரிசையாக பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் டிவிட்டர் செய்தி வெளியிட்டனர்.

இந்நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மத்திய அரசிற்கு ஆதரவாக டிவீட் வெளியிட்டுள்ளதால் அவர்கள்  ஏதேனும் அழுத்தத்தினால் இந்த டிவிட்டர் செய்தியை வெளியிட்டார்களா என்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகைய்ல்,

மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் மற்றும் பிற தலைவர்கள் புகார் அளித்ததை அடுத்து, மத்திய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக  பிரபலங்கள் டிவீட் செய்யக்கோரி எந்தவிதமான அழுத்தத்திற்கும் உள்ளார்களா என்பதை அறியவே புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த டிவீட்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒருசில மணிநேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார் மற்றும் சைனா நேவால் ஆகியோரின் டிவீட்கள் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றது.

சில டிவீட்களில் ஒரு வார்த்தை கூட மாறாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.