ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

கரோனாவால் பலியான மருத்துவர்கள்: மத்திய அரசின் புள்ளிவிவரத்தை மறுக்கும் மருத்துவ சங்கம்

கரோனாவால் 162 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறிய தகவலை இந்திய மருத்துவ சங்கம் மறுத்துள்ளது.

News image

கரோனாவால் பலியான மருத்துவர்கள்: மத்திய அரசின் புள்ளிவிவரத்தை மறுக்கும் மருத்துவ சங்கம்

Updated On :3 பிப்ரவரி 2021, 12:55 pm

கரோனாவால் 162 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறிய தகவலை இந்திய மருத்துவ சங்கம் மறுத்துள்ளது.

கரோனாவால் இதுவரை நாடு முழுவதும் 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் மற்றும் 44 சுகாதாரத்துறை பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே தெரிவித்தார்.

இந்த தகவலை மறுத்து மத்திய இணை அமைச்சருக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் எழுத்தப்பட்டுள்ள கடிதத்தில் இதுவரை 734 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்,

கரோனாவால் 162 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக நீங்கள் தெரிவித்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளோம். இதுவரை நாடு முழுவதும் உயிரிழந்துள்ள 734 மருத்துவர்களின் பெயரை பட்டியலிட்டுள்ளோம்.

கரோனா பேரிடரில் வீட்டில் பாதுகாப்பாக இருக்காமல், சேவை செய்வதற்காக பணிக்கு வந்து தேசத்திற்காக உயிரிழந்துள்ளனர்.   

தரவை சரிபார்ப்பதில் மத்திய அரசின் அக்கறையின்மையைக் கண்டிப்பதுடன், உயிரழந்த மருத்துவர்களின் முழு தரவையும் சரி பார்த்து, அவர்களை கெளரவிக்க உயர் நிலைக் குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.