/

மறையாத மனிதநேயம்: தில்லியில் கரோனா மையமாக மாற்றப்பட்ட மசூதி

அதிகரித்து வரும் கரோனா பரவலையடுத்து தில்லியில் உள்ள மசூதி ஒன்றை தற்காலிக கரோனா சிகிச்சை மையமாக மாற்றியமைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

தில்லியில் கரோனா மையமாக மாற்றப்பட்ட மசூதி(படம்: டிவிட்டர்)

Updated On :30 ஏப்ரல் 2021, 11:59 am

அதிகரித்து வரும் கரோனா பரவலையடுத்து தில்லியில் உள்ள மசூதி ஒன்றை தற்காலிக கரோனா சிகிச்சை மையமாக மாற்றியமைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தில்லியில் நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தில்லியில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தில்லியில் உள்ள கிரின் பார்க் மசூதியை கரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து மசூதியின் இணை செயலாளார் கூறியது,

மருத்துவர்களின் பரிந்துரையின்படி வருபவர்களுக்கு இங்கு படுக்கை வழங்கப்படும். நாங்கள் உணவு, மருந்துகள், பிபிஇ உடை, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவை இலவசமாக வழங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.