பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு: தில்லி காவல் ஆணையர்

தில்லியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

News image

ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் தில்லி நகரம்.

Updated On :17 ஏப்ரல் 2021, 8:52 am

தில்லியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தில்லியில் நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து தில்லியில், இரவு நேரம் மற்றும் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வார இறுதி நாள்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து தில்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா பேசியது,

வார இறுதி ஊரடங்கு உத்தரவை காவல்துறையினர் கடுமையாக அமல்படுத்துயுள்ளனர். தேவையில்லாமல் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது வழக்குத் தொடரப்படுகிறது.

வார இறுதி ஊரடங்கு உத்தரவை அனைத்து மக்களும் கடைபிடிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் இருந்தால் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.