பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(ஏப்.17) ஹர்ஷ் வர்தன் ஆலோசனை

கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

News image

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)

Updated On :16 ஏப்ரல் 2021, 8:44 am

கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியது,

கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளேன். மேலும், நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் நிர்வாகத்துடன் திங்கள்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளேன்.

மேலும், நாடு முழுவதும் உள்ள 54 மாவட்டங்களில் கடைசி 7 நாள்களிலும், 44 மாவட்டங்களில் 28 நாள்களில் புதிதாக கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

கரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்கும் நிறுவனங்களிடம் உற்பத்தியை அதிகரிக்கும்படி கூறியுள்ளோம். மருந்துகளை அனுமதி இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.