புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கரோனாவிலிருந்து மீண்டார் கேரள முதல்வர்

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தொற்றிலிருந்து மீண்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

News image

முதல்வர் பினராயி விஜயன்

Updated On :14 ஏப்ரல் 2021, 10:31 am

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தொற்றிலிருந்து மீண்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இன்று பினராயிக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்றிலிருந்து மீண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.