டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7வது நாளாக இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

News image

கோப்புப்படம்

Updated On :30 செப்டம்பர் 2020, 3:57 pm

ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7வது நாளாக இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது. 

இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான மான்கோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6.45 மணியளவில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக கையெறி குண்டுகள் வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து இந்திய தரப்பிலும் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது என  என கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. இதேபோன்று ரஜௌரி மாவட்டத்தின் பூஞ்ச் மற்றும் டேக்வார் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7 வது நாளாக தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.