/

வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி

வங்கதேசத்தின் குமாய் ஆற்றில் புதன்கிழமை படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

UNI

வங்கதேசத்தின் குமாய் ஆற்றில் புதன்கிழமை படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் நெட்ரோகோனா மாவட்டத்தில் குமாய் ஆற்றில் புதன்கிழமை காலை 11 மணியளவில் 32 பயணிகளுடன் சென்ற படகு மணல் திட்டில் மோதி கவிழ்ந்தது. 

இதில், தற்போது வரை 5 பெண்கள், 5 குழந்தைகள் என மொத்தம் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

படகு கவிழ்ந்தவுடன் நீச்சல் தெரிந்த 8 பேர் மட்டும் கரைக்குத் திரும்பினர். படகில் பயணம் செய்த மற்ற பயணிகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.