ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாகிஸ்தான் மதரஸாவில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்

பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ஒரு மதரஸாவில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 70 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image

குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

Updated On :27 அக்டோபர் 2020, 7:52 am

பெஷ்வர்: பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ஒரு மதரஸாவில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 70 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான செய்தியில்,

பெஷ்வர் நகரின் டிர் காலனியில் அமைந்துள்ள ஜாமியா ஜூபீரியா மதரஸாவில் குர்ஆன் வகுப்பின் போது இந்த சம்பவம் நடந்தது. இதில் 7 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 70 பேர் காயமடைந்துள்ளனர். 

பலியானவர்களில் 4 பேர் 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் என்று பேஷ்வரின் லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (செயல்பாடுகள்) மன்சூர் அமன் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் குண்டுவெடிப்பிற்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனமான (ஐ.இ.டி) 5 கிலோ வரை பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என கூறினார்.

விபத்தில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

பிரதமர் இம்ரான் கான் குண்டுவெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் குணமடைந்து வர பிராத்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் பி.எம்.எல்-என் தலைவருமான நவாஸ் ஷெரீப்பு, குண்டுவெடிப்பைக் கண்டித்து, மதரஸாவை குறிவைத்தவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.