கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பாகிஸ்தான் மதரஸாவில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்

பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ஒரு மதரஸாவில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 70 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
Updated On :27 ஜனவரி 2024, 5:43 pm

IANS

பெஷ்வர்: பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ஒரு மதரஸாவில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 70 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான செய்தியில்,

பெஷ்வர் நகரின் டிர் காலனியில் அமைந்துள்ள ஜாமியா ஜூபீரியா மதரஸாவில் குர்ஆன் வகுப்பின் போது இந்த சம்பவம் நடந்தது. இதில் 7 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 70 பேர் காயமடைந்துள்ளனர். 

பலியானவர்களில் 4 பேர் 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் என்று பேஷ்வரின் லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (செயல்பாடுகள்) மன்சூர் அமன் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் குண்டுவெடிப்பிற்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனமான (ஐ.இ.டி) 5 கிலோ வரை பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என கூறினார்.

விபத்தில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

பிரதமர் இம்ரான் கான் குண்டுவெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் குணமடைந்து வர பிராத்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் பி.எம்.எல்-என் தலைவருமான நவாஸ் ஷெரீப்பு, குண்டுவெடிப்பைக் கண்டித்து, மதரஸாவை குறிவைத்தவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.