ஜப்பானில் கடுமையான வெயில்: 25 பேர் பலி
ஜப்பானில் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் 25 பேர் பலியாகினர், 12,800 பேர் காயமடைந்துள்ளனர்.


ஜப்பானில் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் 25 பேர் பலியாகினர், 12,800 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஜப்பானிய தீ மற்றும் பேரழிவு மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
பாதிக்கப்பட்ட மக்களில் 45.4 சதவீத மக்கள் வீட்டிற்குள் இருந்தவர்களும், 17 சதவீத மக்கள் வேலைக்கு சென்றவர்களும் ஆவர்.
பாதிக்கப்பட்ட 12,800 மக்களில், கிட்டத்திட்ட 4 ஆயிரம் பேர் முதியவர்கள். அதில் 387 பேர் உயிரிக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
டோக்கியோ மற்றும் ஜப்பானின் பிற பகுதிகளில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்) வரை பதிவாகியுள்ளது.
வருடத்தின் இந்தக் காலகட்டத்தில் ஜப்பான் நாட்டில் எப்போதும் தீவிர வெப்பநிலை பதிவாகும். மேலும், வெயில் காரணமாக உயிரிழப்புகளைப் பதிவு செய்ய அதிகாரிகள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டு, வெயில் காலத்தில் 126 பேர் பலியாகினர் மற்றும் 70,000 க்கும் அதிகமானோர் வெப்ப சமந்தமான பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...