/

இலங்கை அரசின் புதிய கொள்கை ஆக.20 ல் தாக்கல்

இலங்கை அரசின் புதிய கொள்கையை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

News image
இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபட்ச (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

PTI

இலங்கை அரசின் புதிய கொள்கையை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஆகஸ்ட் 20 ம் தேதி நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

புதிய அரசின் தொடக்கக் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபட்ச தலைமை தாங்க உள்ளார். புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அறிக்கையை ஆகஸ்ட் 20-ம் தேதி அவர் வாசிப்பார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தனர்.

பிரதமர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பானமையுடன் வெற்றிப் பெற்றது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 150 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.