தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கர்நாடகத்தில் தொடரும் கனமழை : அமைச்சர்களுக்கு உத்தரவு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் எடியுரப்பா உத்தரவிட்டுள்ளார்.

News image

கர்நாடகாவில் தொடரும் கனமழை : அமைச்சர்களுக்கு உத்தரவு

Updated On :6 ஆகஸ்ட் 2020, 12:40 pm

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் எடியுரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில்,

கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், மக்களுக்கு நிவாரண பொருள்களை விநியோகம் செய்யுமாறும் கூறியுள்ளேன்.

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அவசர நிவாரணப் பணிகளுக்காக ரூ. 50 கோடியை விடுவித்து உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர்கள் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். 

மேலும், நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதி  தேவைப்படின் அதை விரைவில் வழங்குவதாக உறுதியளித்துள்ளேன் என எடியூரப்பா கூறினார்.

மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர்  அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.