கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஜேட்லியின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு: வெங்கய்ய நாயுடு இரங்கல்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி(66) மறைவு நாட்டிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என குடியரசுத்

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:54 am

ANI


முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி(66) மறைவு நாட்டிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 

சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 12.07 மணியளவில் காலமானதாக எய்மஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அருண் ஜேட்லியின் மறைவையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அவரது மரணம் நாட்டிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். என் வருத்தத்தை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் ஒரு சக்திவாய்ந்த அறிவுஜீவி, ஒரு திறமையான நிர்வாகி மற்றும் அப்பழுக்கற்ற நேர்மையான மனிதர் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.