2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிம்லா அருகே ஜீப் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து: 4 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

சிம்லா அருகே ஜீப் ஒன்று பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:50 pm

ANI

புதுதில்லி: சிம்லா அருகே ஜீப் ஒன்று பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா அருகே ஜீப் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் படுகாயமைடைந்த குழந்தை உட்பட 3 பேர் ரோகூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

இந்த விபத்தானது குட்டுவிலிருந்து டியூனீ செல்லும் வழியில் 3 கிலோ மீட்டர் ஸ்னைல் என்ற இடத்தில் நடந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து சிம்லா காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். 

கடந்த மாதம், குல்லு மாவட்டத்தில் ராணி நல்லாவில் நடந்த கார் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு முந்தைய ஒரு விபத்தில், மும்பையில் இருந்து சுமார் 175 கிமீ தூரத்தில் போலந்துப்பூர் அருகே ஒரு ஆழமான பள்ளத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் 34 பேர் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பல்கலைக்கழக ஊழியர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.