சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காங்கிரஸ் கையில் மீண்டும் ஆட்சியை கொடுக்கக் கூடாது: பிரதமர் மோடி 

வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:00 pm

ANI


புஷ்கர்: வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

ராஜஸ்தானின் புஷ்கர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆரோக்கியமான மக்களாட்சிக்கு பலம் வாய்ந்த எதிர்கட்சி தேவை என்றும், ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தோற்ற கட்சியே தற்போது எதிர்கட்சியாக இருப்பதாகவும் விமர்சித்தார். காங்கிரஸ் உண்மையாக தேர்தலில் போராடாதது ஏன்? பொய்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை பரப்புவதில் அவர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்? என கேள்வி எழுப்பியவர் சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருப்பதாக விமர்சித்தார். 

வாக்கு வங்கி அரசியலை வைத்து ஆட்சிக்கு வரும் கட்சியால் அரசு அதிகாரிகளிடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் அதிகாரிகள் செயல்பட வைக்கப்படுவார்கள் என்றும், இதனால் அதிகாரத்துவம் முற்றிலுமாக அழிக்கப்படுவதாகவும், அரசியல் வளர்ச்சி காங்கிரஸூக்கு ஏற்கத்தக்கதல்ல எனக் கூறினார். 

மேலும், தாம் நாட்டிற்காக பிரதமராக இருந்தாலும் எப்போதும் பாஜகவின் சாதாரண தொண்டனாகவே தான் இருப்பதாதவும்,  தலைமை வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்று பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகக் கூறிய மோடி, காங்கிரஸின் கையில் மீண்டும் ஆட்சியை செல்லவிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.