தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கர்நாடகாவில் பாஜக பிரமுகரின் அடுக்கு மாடி குடியிருப்பில் கட்டுக்கட்டாக போலி வாக்காளர் அட்டை பறிமுதல்

கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதியில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:00 pm

IANS

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாஜக பிரமுகரின் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் கட்டுக்கட்டாக போலி வாக்காளர் அட்டையை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  

பெங்களூரூவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்குட்பட்ட ஜலஹள்ளியில் உள்ள பாஜக பிரமுகர் ஒருவரின் எஸ்எல்வி பார்க் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. 

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று அங்கு சோதனை மேற்கொண்டதில் 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் பிரிண்டர்கள் மற்றும் 5 லேப்டாப்களை கைப்பற்றினர். 

இதை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி (ஆர்.ஆர்.நகர்) தேர்தலை ரத்து செய்யும் படி காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளடதுடன், இந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளூர் பாஜக தலைவருக்கு சொந்தமானது. இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எதிராக உயர்மட்ட விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக தலைவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜகவினர் நாடகம் நடத்துவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் போலி அல்ல உண்மையானது தான் எனினும் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கூறிய புகாரில் உண்மையில்லை என பாஜக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் முனி ரத்னாநாயுடு தோல்வி பயத்தில் பாஜக மீது அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளார் என்றனர்.

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு தேர்தலை ரத்து செய்யலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.