ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காஷ்மீரில் பள்ளி பேருந்து மீது கல்வீச்சு: பள்ளிக் குழந்தைகள் 2 பேர் காயம்; மெகபூபா முஃப்தி கண்டனம்

காஷ்மீரில் பள்ளி பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை

News image
Updated On :2 மே 2018, 10:43 am

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பள்ளி பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கத்துவா சிறுமி பலாத்கார சம்பவத்தை அடுத்து வன்முறை ஏற்பட்டதால் இயல்பு நிலை திரும்பும் வரை கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில்  சோபியான் மாவட்டத்தில் உள்ள கனிபோரா என்ற இடத்தில் 4 வயது குழந்தைகள் உள்பட 50 மாணவர்கள் சென்ற ரெயின்போ இன்டர்நேஷனல் பள்ளிப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில், இரு குழந்தைகளுக்கு தலையில் காயமம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த இரண்டாம் வகுப்பு மாணவன் ரேகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவத்திற்கு முதல்வர் மெஹ்பூபா முஃப்தியும், முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சோபியானில் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. உணர்ச்சியற்ற, முட்டாள்தனமான மற்றும் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மெகபூபா முஃப்தி கூறியுள்ளார். 

உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பஸ் மீது கற்களை வீசுவது கல்வீச்சாளர்களின் நோக்கத்திற்கு பயனளிக்கும்? இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளாரர். 

ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.பி வாயித், “இளம் பள்ளி குழந்தைகள் செல்லும் பள்ளி பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் முட்டாள்தனமானது. குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.