ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாமா? தொலைதொடர்பு ஆணையம் விளக்கம்

இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின்போது செல்போன் மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்துவதற்கு தொலைதொடர்பு

News image
Updated On :1 மே 2018, 1:37 pm

புதுதில்லி: இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின்போது செல்போன் மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்துவதற்கு தொலைதொடர்பு ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது. 

விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. அதனை மாற்றியமைத்து விமான பயணத்தில் செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என டிராய் அமைப்பு மத்திய தொலை தொடர்பு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட தொலை தொடர்பு ஆணையம், இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்த இன்று அனுமதி அளித்துள்ளது என தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும்போதும் செல்போன் பயன்படுத்த கூடாது என்றும், விமானம் 3 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேலே பறக்கும்போது மட்டுமே செல்போனில் பேசவும், இணையதளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட உள்ளது. மேலும், விமானி ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் பயணத்தின் போது செல்போன், இணையதள பயன்பாட்டிற்கு அனுமதி கிடையாது. 

இந்த அறிவிப்பு சிறந்த மற்றும் திருப்திகரமான நுகர்வோர் குறைதீர்ப்புக்கு வழி வகுக்கும். தொலைத்தொடர்பு துறையில் காலாண்டில் 10 மில்லியனுக்கும்
குறைவான வருவாயைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 

விமான நிறுவனங்கள் மற்ற சில நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய அவகாசம் தேவைப்படுவதால், இந்த திட்டம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு தான் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. 

இந்த அறிவிப்பு விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.