பெங்களூரு: மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை மற்றும் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவால் கேரளத்தின் சில மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 28 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், சொத்துகளுக்கு மிகப்பெரிய அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. இதனால், கேரள மக்கள் சொல்லொணாத் துயரத்தை அடைந்து வருகின்றனர். மழை-வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளை மறுகட்டுமானம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ராணுவ உதவி தேவை என்று மத்திய அரசிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கைவைத்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு நிலவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசின் சார்பிலும், கர்நாடக மக்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள கேரள மாநில அரசுக்கும், மாநில மக்களுக்கும் கர்நாடக அரசு மற்றும் மக்களின் ஆதரவையும், உணர்வுகளையும் காட்டுவதன் உதவியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து கேரளத்துக்கு உடனடியாக ரூ.10 கோடியை விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் ஒரு மருத்துவர்கள் குழுவை அனுப்ப முதல்வரின் செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வேண்டிய உதவிகள் செய்வதாக கூறியுள்ளார். நிலைமையை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வன விலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


