நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: ஹைதராபாத்தில் 9 பேர் கைது

ஹைதராபாத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் 5 இரு சக்கர

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:41 pm

PTI

ஹைதராபாத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டி நேற்று சனிக்கிழமை மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீஸாரும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தின் போன்கிர் பகுதியில் சிலர் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராச்சகோட்டா ஆணையர் சிறப்பு படையை அமைத்து நடவடிக்கை உத்தரவிட்டார். 

இதையடுத்து போன்கிர் பகுதியில் உள்ள ஒரு கோழி கடையில் சிறப்புப் படை போலீஸார் அதிரடியாக சோதனை ஈடுட்டனர். அப்போது கிரிக்கெட் சூதாட்ட கும்பல் தலைவன் இர்ஃபான் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

சோதனையின்போது அவர்களிடம் இருந்த ஒரு கார் மற்றும் ஐந்து இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றவர்களிடம் இருந்து பணம் பெற்று 30 சதவீத கமிஷனுக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.