/

போஆவ் ஆசிய மன்றம் மாநாடு 2018: சீன ஹைய்நான் மாநிலத்தின் நாளை தொடங்குகிறது

போஆவ் ஆசிய மன்றம் மாநாடு 2018: சீன ஹைய்நான் மாநிலத்தின் நாளை தொடங்குகிறது

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:40 pm

திருமலை சோமு

போஆவ் ஆசிய மன்றம் மாநாடு 2018: சீன ஹைய்நான் மாநிலத்தின் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டின் போஆவ் ஆசிய மன்ற மாநாடு சீன ஹைய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நாளை ஏப்ரல் 8 முதல் 11ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. 

இவ்வாண்டின் போ ஆவ் உச்சி மாநாட்டின் மிக முக்கியமான கொள்கை உலகமயமாக்கல், சிறப்பானா ஆசியா, செழுமையான வளர்ச்சி, புத்தாக்கம், என்பதாகும். இந்த நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து 60க்கும் மேலான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள தொழிலதிபர்கள்., அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். 
துவக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்ற உள்ளார். அவர் தனது உரையில் 40 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கொடுக்க இருப்பதாகவும், ஹைனான் உட்பட சீனாவின் பல்வேறு துறைமுகங்களில் இலவச வர்த்தக துறைமுகம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட இருப்பதாக செளத் சீனா மார்னிங் போஸ்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீன அதிபரின் பதவிகாலம் நீட்டிப்பு  சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் ஜி- ஜின்பிங் ஆற்றும் முதல்  உரை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.