ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிக்கு ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா

Updated On :4 ஏப்ரல் 2018, 3:27 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிக்கு ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி நாட்டின் மிகச்சிறந்த சுபி மத இசைக்கலைஞர்களில் ஒருவரான அம்ஜத் சப்ரி சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் இதில் அடங்குவர்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பாதுகாப்பு படையினருடனும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு 62 பேரைக் கொன்ற 10 பயங்கரவாதிகளுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தன. 

அந்த பயங்கரவாதிகள், முகமது இஸ்டாக், முகமது ரபீக், முகமது ஆரிஷ், ஹபிபுர் ரகுமான், முகமது பயஸ், இஸ்மாயில் ஷா, முகமது பசல், ஹஸ்ரத் அலி, முகமது ஆசிம், ஹபிபுல்லா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

முகமது இஸ்டாக்கும், முகமது ஆசிமும் சேர்ந்து பாகிஸ்தானின் மிகச்சிறந்த சுபி மத இசைக்கலைஞரான அம்ஜத் சப்ரியையும், சட்ட அமலாக்கல் பிரிவினர் மற்றும் ஆயுதப்படைகள் மீது நடத்திய தாக்குதலில் 17 அதிகாரிகளை கொன்றவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இவர்களுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்படுவதாக அறிவித்தது. மரண தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி பாகிஸ்தானின் மிகச்சிறந்த சுபி மத இசைக்கலைஞரான அம்ஜத் சப்ரி காரில் சென்றுகொண்டிருந்த போது இரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றனர். சப்ரி மீதான தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் ஹக்கிமுல்லா மசூத் குழு பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள 10 பயங்கரவாதிகளும் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.