லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட் தொழில் துறைக்கு உத்வேகம் தருவதாக உள்ளது: சிஐஐ கருத்து

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட் தொழில்துறைக்கு உத்வேகம் தருவதாக உள்ளது

Updated On :28 மே 2017, 5:27 am

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட் தொழில்துறைக்கு உத்வேகம் தருவதாக உள்ளது இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) புதுவை பிரிவு தலைவர் ஆர்.டி.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தில் தொழில் துறை முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதாகத் தொழில் தொடங்கும் வகையில் ஒற்றை சாளர முறை, துரிதமான ஓப்புதல், சுயசான்றளிப்பு மூலம் ஓப்புதல் பெறுதல், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு உரிமம் வழங்குதல், மூலம் புதுவையை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது.

அன்னிய நேரடி முதலீடு மூலம் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஏற்படுத்துதல், மருந்து உற்பத்தி பூங்கா, ஆயுத்த ஆடை, உணவு பதப்படுத்துதல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு பிரிவு போன்றவை தொடங்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.

மேலும் பொருளாதார வளர்ச்சிக்காக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை சுமூகமாக செயல்படுத்த அரசின் முடிவு பாராட்டுக்குரியது. இந்திய தொழில் கூட்டமைப்பு முதல்வர் நாராயணசாமி அரசுடன் மாநிலத்தின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடும் என்றார் ஸ்ரீகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.