திருச்சி பெல் நகரியத்திலுள்ள அருள்மிகு சிறி வேங்கடாசலபதி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டுத் தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெல் நகரியத்தில் அமைந்துள்ள சிறிதேவி, பூதேவி சமேத சிறி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் ஆண்டு பெருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. எட்டாம் ஆண்டு பெருவிழா பிப்ரவரி 21 ஆம் தேதி யாகசாலை பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு இந்திர விமானத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து 22 ஆம் தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனங்களிலும், 23- ஆம் தேதி காலை வேணுகோபாலன் திருக்கோலத்தில் பல்லக்கிலும், இரவு சேஷவாகனத்திலும் சுவாமி புறப்பாடாகி வீதியுலா வந்தார்.
24 ஆம் தேதி நாச்சியார் திருக்கோலம்- கருட வாகனம், 25 ஆம் தேதி ஹம்சம், ஹனுமந்த வாகனம், 26 ஆம் தேதி சிம்மம், யானை வாகனங்கள், 27 ஆம் தேதி இரவு சூர்ணாபிஷேகம், பூந்தேரில் பெருமாள் புறப்பாடு, 28 ஆம் தேதி யாளி, குதிரை வாகனம் என காலை மற்றும் இரவு நேரத்தில் சுவாமி புறப்பாடாகி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சிறிதேவி, பூதேவி சமேதராய் அருள்மிகு வேங்கடாசலபதி திருத்தேரில் எழுந்தருளிய பின்னர், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெல் செயல் இயக்குநர் ஆர். ராஜாமனோகர் காலை 10 மணிக்குத் திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தைத்தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோடும் வீதிகளின் வழியாகச் சென்ற தேர் பிற்பகல் 12.34 மணிக்கு நிலையை வந்தடைந்தது. மாலையில் கூத்தைப்பார் குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
வியாழக்கிழமை (மார்ச் 2) 81 கலச திருமஞ்சனம், புஷ்பயாகம். சப்தாவரணம், கொடிஇறக்கத்த்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்ட விழாவில், சிறி வேங்கடாசலபதி சேவா சமிதி துணைத் தலைவர் எஸ். மனோகர், எம்.பழனிவேல், டீ.சேகர், குருச்சந்திரன், சேவா சமிதி செயலர் கே.முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

