தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

'பிரதமர் மோடிக்கு பூச்செண்டு வழங்காதீர்'- மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பூச்செண்டு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

News image
Updated On :17 ஜூலை 2017, 12:54 pm

பிரதமர் மோடிக்கு பூச்செண்டு வழங்கி வரவேற்பதை தவிர்க்குமாறு மத்திய உள்ளதுறை அமைச்சகம் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் அறிவித்ததாவது:

இந்தியாவின் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு. 

அதாவது நம் பிரதமர் மோடி அவர்களுக்கு தங்கள் சார்பிலான வரவேற்பின் போது இனி வரும் காலங்களில் சால்வை, பூச்செண்டு உள்ளிட்டவைகளை வழங்க வேண்டாம்.

மாறாக ஒரு பூவுடன் கூடிய கதர் கைக்குட்டை அல்லது புத்தகம் வழங்கி கௌரவிக்கலாம். இது அனைவருக்கும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது என்றிருந்தது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி பிரதமர் மோடி, பூச்செண்டுகளை தவிர்த்து புத்தகம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், புத்தக வாசிப்பு குறித்து அவர் கூறியதாவது:

ஒருவரின் பணிநிமித்தம் காரணமாக புத்தகம் வாசித்து அறிவை வளர்த்துக்கொள்வதை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக்கூடாது. அதனாலேயே தனி மனிதனின் சமூக அக்கறை அதிகரிக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது இதன்மூலம் புரியவரும். 

நம் அறிவை வள்ர்த்துக்கொள்வதன் மூலம் சமூகத்தில் உள்ள பெரும்பாலான பிரச்னைகளுக்கு விடிவு காண முடியும். சமூக சீர்கேடுகளை சரிசெய்ய முடியும். அமைதியைப் பரப்ப முடியும். இந்தியாவின் மரியாதையையும், தேச ஒருமைப்பாட்டையும் வளர்க்க முடியும். 

இந்த ஒரு சிறிய மாற்றம் நாளை பெரிய அளவிலான சாதனையாக மலரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.