தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு 'திராணி' இல்லை: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்

சீனாவை எதிர்ப்பதற்கு இந்தியாவுக்கு போதிய அளவு தைரியம் இல்லை என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, திங்கள்கிழமைதெரிவித்தார்.

News image
Updated On :17 ஜூலை 2017, 11:17 am

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

லடாக் பகுதியின் பெரும்பாலான இடங்களை சீனா ஆக்கிரமித்து விட்டது. அதுகுறித்து நாம் சப்தம் எழுப்புகிறோமே தவிர, அதனை திரும்பப் பெறும் அளவுக்கு போதிய நடவடிக்கைகள் எதிலும் இதுவரை ஈடுபடவில்லை. அதற்கான தைரியமும் நம்மிடம் இல்லை.

சீனாவுடன் இந்தியா நட்பு பாராட்டுவதே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். இந்த விஷயத்தில் சீன அரசுடன் நட்பு பாராட்டும் விதமான நடவடிக்கைகளில் இந்திய அரசு உடனடியாக இறங்க வேண்டும். 

சீன அரசு பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவதே நம்மால் தான். இந்திய அரசு மட்டும் சீன அரசோடு நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வந்திருந்தால் அவர்கள் நிச்சயம் பாகிஸ்தானுடன் நெருங்கி இருக்க மாட்டார்கள்.

அதுபோலதான் தலாய் லாமா சர்சையும். அவரை இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்றும்படி சீனா கேட்கிறது. ஆனால், இந்தியாவுக்கு வந்தாரை வாழவைத்துதான் பழக்கம், வெளியேற்றி பழக்கமில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.