தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மம்தா கட்சியில் விரிசல்? 6 எம்.எல்.ஏ-க்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பு...!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்குவாக்களித்தனர்.

News image
Updated On :17 ஜூலை 2017, 10:46 am

குடியரசுத்தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர். இதனால் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து பாஜக-வுக்கு வாக்களித்த சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரான ஆஷிஷ் சாஹா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மம்தா பானர்ஜி அவர்கள் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதில் முக்கியமானது மாநிலத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வேரோடு அகற்றுவதுதான்.

திரிபுராவில் அவர்கள் தான் கடந்த 25 வருடங்களாக ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் இம்மாநிலம் எவ்விதத்திலும் வளர்ச்சியடையவில்லை. இதை நன்கு அறிந்த மம்தா பானர்ஜி அவர்கள் அதுகுறித்த நடவடிக்கையில் இதுவரையில் ஈடுபடவில்லை.

ஆனால் அதற்கு மாறாக எதிர்கட்சிகளின் வேட்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்றவருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீரா குமாருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது அவரது கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது.

மம்தா பானர்ஜி வேண்டுமானால் மீரா குமாருக்கு அவருடைய ஆதரவை தெரிவிக்கலாம். ஆனால் எங்களால் அது முடியாது. எனவே மம்தா பானர்ஜிக்கு தகுந்த பாடம் புகட்டும் விதமாக நாங்கள் அனைவரும் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு எங்கள் வாக்குகளை அளித்தோம். 

இதன்மூலம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம் என்றார்.

முன்னதாக இதுபோன்று வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்ற பயத்தில் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மேற்குவங்கதிற்கு வந்து வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.