குடியரசுத்தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர். இதனால் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து பாஜக-வுக்கு வாக்களித்த சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரான ஆஷிஷ் சாஹா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மம்தா பானர்ஜி அவர்கள் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதில் முக்கியமானது மாநிலத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வேரோடு அகற்றுவதுதான்.
திரிபுராவில் அவர்கள் தான் கடந்த 25 வருடங்களாக ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் இம்மாநிலம் எவ்விதத்திலும் வளர்ச்சியடையவில்லை. இதை நன்கு அறிந்த மம்தா பானர்ஜி அவர்கள் அதுகுறித்த நடவடிக்கையில் இதுவரையில் ஈடுபடவில்லை.
ஆனால் அதற்கு மாறாக எதிர்கட்சிகளின் வேட்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்றவருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீரா குமாருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது அவரது கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது.
மம்தா பானர்ஜி வேண்டுமானால் மீரா குமாருக்கு அவருடைய ஆதரவை தெரிவிக்கலாம். ஆனால் எங்களால் அது முடியாது. எனவே மம்தா பானர்ஜிக்கு தகுந்த பாடம் புகட்டும் விதமாக நாங்கள் அனைவரும் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு எங்கள் வாக்குகளை அளித்தோம்.
இதன்மூலம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம் என்றார்.
முன்னதாக இதுபோன்று வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்ற பயத்தில் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மேற்குவங்கதிற்கு வந்து வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


