சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

புதுவை பல்கலை பதிவாளராக பிஆர்.பாபு ஐஏஎஸ் நியமனம்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுச்சேரி அரசு துறைமுகம், சுகாதாரத் துறை செயலாளர் பிஆர்.பாபு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:25 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி:  புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுச்சேரி அரசு துறைமுகம், சுகாதாரத் துறை செயலாளர் பிஆர்.பாபு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த சந்திரா கிருஷ்ணமூர்த்திக்கும், பதிவாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் யதுவன்ஷிக்கும் இடையே நிர்வாக ரீதியில் மோதல்கள் ஏற்பட்டன. பதிவாளரை செயல்படவிடாமல் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே அவர் பணிமாறுதலில் சென்று விட்டார்.

இதற்கிடையே பல்வேறு புகார்கள் எதிரொலியாக சந்திரா கிருஷ்ணமூர்த்தியும், பதவியில் இருந்து குடியரசுத் தலைவரால நீக்கப்பட்டார். இந்நிலையில் துணைவேந்தர் பதவிக்கு டாக்டர் அனிஷா பஷிர் கான் பொறுப்பாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். பதிவாளர் (பொ) டாக்டர் ராமச்சந்திரன் செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை சீரமைக்கும் வகையில் நிரந்தர துணைவேந்தர், பதிவாளர் பணியிடங்களை நிரப்பட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி பதிவாளர் பொறுப்புக்கு பிஆர்.பாபு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி அரசு செயலாளரான அவர் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியோடு பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.  இந்நிலையில் அவர் பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதால் உடனே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

புதுவை பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள பாபு ஐஏஎஸ் 1.9.2017 முதல் 31.8.2019 வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பல்கலைக்கழக பதிவாளராக மீண்டும் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது பல்கலை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.