டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆந்திராவில் கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: அரசு அதிரடி உத்தரவு

'வரும், ஜனவரி 1 அன்று, கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது' எனவும் அப்படி கொண்டாடுவது ஹிந்து மதத்தின்

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:26 pm

DIN

'வரும், ஜனவரி 1 அன்று, கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது' எனவும் அப்படி கொண்டாடுவது ஹிந்து மதத்தின் பாரம்பரியம் அல்ல என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாள் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

இந்நிலையில், ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு, அம்மாநில ஹிந்து அறநிலையத் துறை வெள்ளிக்கிழமை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2018 ஜனவரி 1-ஆம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில் கொண்டாடக் கூடாது. இது, நம் வேத சாஸ்திரத்துக்கு எதிரானது எனவும் அப்படி கொண்டாடுவது ஹிந்து மதத்தின் பாரம்பரியம் அல்ல. இந்த நாளில், கோவில்களில் சிறப்பு விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிப்பது, சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது. தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியில் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோவில், விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள சிவாலயம் போன்ற புகழ்பெற்ற கோவில்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

உலகெங்கிலும் உள்ள தெலுங்கிற்கான புத்தாண்டு, உகாதி, அன்று கோவில்களில் திருவிழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஹிந்து பாரம்பரியம் கூறுகிறது" எனவும் " மேற்கத்திய புத்தாண்டுகளில் இனிப்புகளை விநியோகிக்கக் கூடாது அல்லது கோவில்கள் அலங்கரிக்கப்படக்கூடாது." என அவுட்லுக் அறிவிப்பு மேற்கோளிட்டுள்ளது. 

புத்தாண்டு தினத்தன்று கோவில்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்றைய தினம் ஹிந்து மரபின் படி, கோவில்களில் பல லட்சம் ரூபாய் நன்கொடையில் அலங்கரிக்கப்படுவதாக ஹிந்து தர்ம பரிரக்ஷண வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடை செய்வது ஹிந்து மதம் பாரம்பரியம் அல்ல ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.