சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி வருகை

முதல்வர் இபிஎஸ்}ஓபிஎஸ் பிரிவுகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் செவ்வாய்க்கிழமை

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:43 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: முதல்வர் இபிஎஸ்}ஓபிஎஸ் பிரிவுகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரியில் தங்குவதற்காக வந்து சேர்ந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக 3 அணிகளாக பிளவு பட்டது. முதல்வர் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தலைமையில் 132 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் இபிஎஸ்}ஓபிஎஸ் பிரிவுகள் திங்கள்கிழமை இணைந்தன. இதற்கு டிடிவி தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளத. அவரது அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் செவ்வாய்க்கிழமை இபிஎஸ் அரசுக்கு தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கூறி ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.

இந்நிலையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளதாக பிற்பகல் முதலே தகவல்கள் பரவின. இதற்கிடையே சிறு சிறு குழுக்களாக எம்.எல்.ஏக்கள் புதுவைக்கு வந்தனர்.

புதுச்சேரி அருகே சின்ன வீராம்பட்டினம் கிராமத்தில் உள்ள விண்ட்ப்ளவர் தனியார் விடுதியில் தங்க உள்ளனர். இதற்காக ஹோட்டலில் மொத்தம் 20 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் எம்.எல்.ஏக்கள் தங்கத்தமிழ்ச்செல்வன், மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், முத்தையன், தங்கதுரை, , உமாமகேஸ்வரி, பார்த்திபன் ஆகியோர் வந்தனர். அங்கு எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் கூறியதாவது:

புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்காக வந்துள்ளோம். ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என மனு கொடுத்தோம். புதுச்சேரிக்கு ஒரு நாள் ஓய்வு எடுப்பதற்காக வந்துள்ளோம்.

எங்களுடன் துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் வந்து தங்குவார். எதிரணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களும் எங்கள் அணியில் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும். பாதுகாப்பு கருதி புதுச்சேரிக்கு வந்துள்ளதாக உடனிருந்த பார்த்திபன் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.