சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்மை பரிசோதனை

 புதுவையில் சிறுமிகளை கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆட்டோ டிரைவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி:  புதுவையில் சிறுமிகளை கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆட்டோ டிரைவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆண்மை பரிசோதனை நடைபெற்றது.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள சில வீடுகளில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போலீஸார் 4 சிறுமிகளை மீட்டனர். பின்னர் அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சுனில்குமார் கெளதம் உத்தரவிட்டார். அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே 4 சிறுமிகளிடம் இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் நீதிபதி வாக்குமூலம்
பெற்றார். இந்நிலையில் அவர்களை பாலியல் ரீதியில் வன்கொடுமை புரிந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் சிபிசிஐடி முழுவீச்சில் இறங்கியது.

புதுவை மற்றும் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முகமது கனி, முஸ்தபா, முகமது அலி உள்ளிட்ட 3 ஆட்டோ டிரைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே கைதான 3 ஆட்டோ டிரைவர்களுக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய சிபிசிஐடி முடிவு செய்தது. இதற்காக நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றனர்.

இந்நிலையில் பிற்பகல் 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிபிசிஐடி போலீஸார்அழைத்து  வந்தனர். அங்கு அவர்களுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது. அதன்பிறகு ஆட்டோ டிரைவர்களை மீண்டும் காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.