தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றதை தடுத்தவருக்கு அரிவாள் வெட்டு: மகன் கைது

போடியில் திங்கள் கிழமை, தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றபோது தடுத்தவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

Updated On :27 ஜூன் 2016, 11:50 am

போடியில் திங்கள் கிழமை, தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றபோது தடுத்தவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் துரைச்சாமி மகன் இளந்தமிழன் (32). இவர் இப்பகுதியில் அடிக்கடி தகராறு செய்து வருவாராம். திங்கள் கிழமை இதேபோல் இவர் தகராறில் ஈடுபட்டு தனது தந்தையையே அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

     இப்போது இவரது வீட்டின் அருகில் வசிக்கும் பாலு மகன் முருகன் (44) என்பவர் தடுக்க சென்றாராம். அப்போது இளந்தமிழன் தனது கையில் இருந்த அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் முருகன் பலத்த காயமடைந்தார்.

 அவரை அப்பகுதியினர் மீட்டு போடி அரசு மருத்துவமையில் சேர்த்தனர். முருகன் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பா.சேகர், சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா மற்றும் போலீஸôர் வழக்கு பதிவு செய்து இளந்தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.