சுற்றுசூழல் மாசை கண்டறிய புதிய ஆப்: ஆந்திர மாநில மாசு கட்டுபாட்டு வாரியம்
சுற்றுசூழல் மாசை கண்டறியும் புதிய ஆப்பை வெளியிட உள்ளதாக ஆந்திர மாநில மாசு கட்டுபாட்டு வாரிய தலைவர் பனிகுமார் தெரிவித்தார்.


சுற்றுசூழல் மாசை கண்டறியும் புதிய ஆப்பை வெளியிட உள்ளதாக ஆந்திர மாநில மாசு கட்டுபாட்டு வாரிய தலைவர் பனிகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது. தற்போது நகரங்களில் சுற்றுசூழல் மாசு அதிகரித்து வருகிறது. அதனால் அதை கட்டுபடுத்த ஒரு கோடி ரூபாய் செலவில் சி. ஏ.ஏ.க்யூ.எம்.எஸ்(continous Ambienced Air Quality Monitoring Station) என்ற மையத்தை ஏற்படுத்த உள்ளனர். இதன் மூலம் 10 வகையான சுற்றுசூழல் மாசு காரணிகளை கண்டறிந்து அதை கட்டுபடுத்த முடியும்.
இதுகுறித்து சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள புதிய ஆப் ஒன்றை மாசுக்கட்டுபாட்டு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போன் மூலம் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்மூலம் காற்றில் பரவியுள்ள மாசின் அளவை தெரிந்து கொள்ள முடியும்.
விசாகபட்டிணத்தில் 2, காக்கிநாடா, விஜயவாடா, திருமலை, திருப்பதியில் தலா ஒன்று என இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...