சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டும்: முதல்வர்

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் கல்வி, கலாசாரம் உள்ளிட்டவை தொடர்பாக

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:56 pm

ப. சுஜித்குமார்

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் கல்வி, கலாசாரம் உள்ளிட்டவை தொடர்பாக அறிந்து கொள்ளலாம் என முதல்வர் வி.நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கத்தின் சார்பில் 20 வது தேசிய புத்தக கண்காட்சி வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. 

90 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி குத்துவிலக்கேற்றி துவங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சியில் உலக புகழ் பெற்ற புத்தகங்களும்,தலை சிறந்த எழுத்தாளர்களின் படைப்பும்,கல்வி சார்ந்த மென் பொருள் குறுந்தகடுகளும், தகவல் தொழில்நுட்ப உபகரணங்களும்  இடம்பெற்றுள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைத்து வயதினருக்கும், ஆண்கள் பெண்கள் போன்றவர்களுக்கும் தனி  தனியான புத்தக வகைகளும் உள்ளன. இக்கண்காட்சியின் சிறப்புகளாக கணிப்பொறி வழி கற்றல் உபகரணங்கள், கல்விசார்ந்த மென்பொருள் தகடுகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் ஆங்கிலம் பிரெஞ்ச் இந்தி மற்றும் பிறமொழி நூல்கள் இடம் பெற்றுள்ளன.

புத்தகம் ஒருவரது நண்பனாக விளங்குபவை. குழந்தைகள் மத்தியில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் பண்டைய வரலாறு, கலாசாரம், ஆன்மீகம், விளையாட்டு, விஞ்ஞானம் தொடர்பாக பரந்த ஞானத்தை பெற முடியும்.

பல்வறு துறைகளில் ஞானங்களை மக்கள் வளர்த்து கொள்ளவேண்டும். சமூக சிந்தனைகள் கலாச்சாரம் போன்றவை வளர்க்கவே இது போன்ற புத்தக கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. சட்ட மேதை அம்பேத்கர் நூல்கள், ஆன்மீக நூல்களை கண்காட்சியில் வாங்கி உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் மு.கந்தசாமி, பேரவை துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து, கூட்டுறவு பதிவாளர் எஸ்.சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டுறவு சங்கத் தலைவர் சீனு.ராமச்சந்திரன், துணைத் தலைவர் பாஞ்.ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு கண்காட்சியில் ரூ.70 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை ஆகின. நிகழாணஅடு ரூ.1 கோடி வரை புத்தகங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம் என செயலாளர் முருகன் தெரிவித்தார்.

வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.45 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.45 வரையும் கண்காட்சி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.