திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி பத்திரமாக மீட்பு: சுஷ்மா சுவராஜ் தகவல்

பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி சாரா மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:06 pm

ANI

புது தில்லி: பஹ்ரைனில் கடத்தப்பட்ட இந்திய சிறுமி சாரா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி 5 வயது சிறுமி சாரா கடத்தப்பட்டாள். சாராவின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் முகநூல் வழியாகவும் சிறுமி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது.

தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நேற்று சிறுமியை கடத்திச்சென்ற காரை கண்டுபிடித்து, சிறுமியை மீட்டனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர்.

பஹ்ரைனில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க உதவிய பஹ்ரைன் அரசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.