பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) மத்திய மண்டல மாநாடு நடைபெறுகிறது.
2016 பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி இக்கட்சி ஏற்கெனவே கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் மாநாடுகளை நடத்தியுள்ள நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கி மத்திய மண்டல மாநாட்டை தற்போது நடத்துகிறது.
திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் க. உமாநாத் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி நிறுவனர் டாக்டர் ச. ராம்தாஸ், மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

