தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சிறிரங்கம் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்: யாக சாலை பூஜைகள் இன்று தொடக்கம்

திருச்சி சிறிரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் முதல் கட்ட மகா சம்ப்ரோக்ஷணத்துக்கான யாக சாலை பூஜைகள் திங்கள்கிழமை இரவு தொடங்குகின்றன.

Updated On :7 செப்டம்பர் 2015, 2:54 am

திருச்சி சிறிரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் முதல் கட்ட மகா சம்ப்ரோக்ஷணத்துக்கான யாக சாலை பூஜைகள் திங்கள்கிழமை இரவு தொடங்குகின்றன.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் சிறிரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் சம்ப்ரோக்ஷணம் நடத்த அரசு முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.18 கோடியில் தொடங்கப்பட்ட திருப்பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. 165 ஏக்கர் பரப்பளவையும், 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்களை உள்ளடக்கிய இத்திருக்கோயிலில் முதல் கட்டமாக 43உப சன்னதிகள், 11 கோபுரங்களில் முதல் கட்ட சம்ப்ரோக்ஷணத்தை செப்டம்பர் 9-ம் தேதி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி திருக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

மகா சம்ப்ரோக்ஷணத்துக்கான யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை இரவு தொடங்குகின்றன.  யாகசாலை மண்டபத்தில் திருவிளக்கு ஏற்றி இறை அனுமதி பெறுதலுடன் தொடங்கி, வாசுதேவ புண்யாஹவாசனம், விக்னேசுவர ஆராதனம், வாஸ்துசாந்தி, பாலிகை பூஜை நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், வேத, திவ்ய பிரபந்தம் தொடக்கம் நடைபெறுகிறது. இப்பூஜைகளுக்குப் பின்னர் சோம கும்ப பாலிகா கடிகா சராவஸ்தாபனமும், துவாரகடிகா கும்ப ஸ்தபானமும் நடைபெறுகிறது.

செப்டம்பர் 8-ம் தேதி காலை காவிரி நீர் கொண்டு வருதலும், தொடர்ந்து இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மகா கும்ப யாக சாலை பிரவேசமும் நடைபெறுகிறது.  மாலை 4.30 மணிக்கு 3-ம் கால யாக சாலை பூஜையும், இரவு 7 மணி முதல் நான்காம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.

செப்டம்பர் 9-ம் தேதி காலை விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளியெழுச்சிக்குப் பின்னர், மகாசாந்தி ஹோமாதிகள், மகா பூர்ணாஹுதி , தஸதானம், யாத்ராதான பூஜைகள் நடைபெற உள்ள.  காலை 5.15 மணிக்கு கடங்கள் வேத கோஷங்களுடன் புறப்பாடும்,காலை 6.30 மணிக்கு 11  கோபுரங்கள்,43 உப சன்னதிகளுக்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு வேத, பிரபந்த சாற்றுமுறையும், காலை 8 மணிக்கு கோஷ்டி, மரியாதைகளும் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.