திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

அரியலூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

அரியலூர் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

Updated On :15 நவம்பர் 2015, 4:54 pm

அரியலூர் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

செந்துறை அருகேயுள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செல்லம் (38). இவர்களுக்கு இரண்டு மகள்களும்,ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த செல்லம், அரியலூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்கப்பட்டார். அங்கும் மருத்துவர்கள் பரிசோதித்த போது பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. பின்னர் செல்லம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியாகியது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் உத்தரவின் பேரில் அகரம் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.