இம்மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 154 ஆய்வக உதவியாளர் பணிக்காலியிடம் உள்ளன. இப்பணிக்கு கடந்த ஏப்.24-ம் தேதி முதல், இம்மாதம் 6-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து பெறப்பட்டன. அதன் அடிப்படையில் இப்பணிக்காலியிடத்திற்கு மொத்தம் 41223 பேர் வரையில் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இப்பணிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 31-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால், இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளோர் தங்களது நுழைவு சீட்டுக்களை 26-ம் தேதி முதல் www.tndge.in என்ற இணைய தளம் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.