இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக அனைத்து பள்ளிகளும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் முதல் வகுப்பில் எத்தனை இடம், அதில் 25 சதவீதம் என்பது எவ்வளவு என்கிற விவரங்களை, ஒவ்வொரு தனியார் பள்ளியும் நுழைவு வாயிலில் தகவல் பலகையில் வைக்க வேண்டும். அதேபோல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் 8-ம் தேதி முதல் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, ஜூன் 15-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் அளிக்க கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.